2008-10-30

மகாத்மா காந்தி


ஒரு ஜீவன் அழைத்தது
பல ஜீவன் துடித்தது
அமைதி புரட்சி வெடித்தது
அந்நிய ஆட்சி முடிந்தது

போர் ஒன்றே சுதந்திரத்திற்கு வழியென்று
பேருக்கு என்றே சொல்லி குருதி வழிந்தது அன்று
பாருக்கு நன்றே சொல்லி திருத்தலாமென்று
போர்பந்தருக்கு இன்றே செல்லுங்களென்று
பூரித்து வழி அனுப்பியதாம் பரமாத்மா
பாரையும் பீரையும் மறந்தது பல ஆத்மா
பெருமையுடன் சொல்வோம் அவர் ஒரு மகாத்மா