2008-10-12

எனது முதல் பதிவு

அனைவருக்கும் வணக்கம்!

அவ்ளோ சீக்கிரம் சீரியசா ஆக தெரியாதுங்க! அட நம்புங்கன்னா!! அதிகநேரம் நான் விளையாட்டுப்பிள்ளைதாங்க!!!

அலையலையாய் தவழ்ந்து வரும் தமிழ் வலைப்பதிவுகளை படிப்பதே என்னுடைய கடந்த சில மாத பொழுதுபோக்காக ஆகிவிட்டது. அடியேன் தமிழ் நடை சொல்லிக்கொள்ளும்படி இருக்காது எனினும் இந்த துணிச்சலான முடிவை எடுத்துள்ளேன். அதாங்க நானும் பதிவு எழுத ஆரம்பிச்சுட்டேன்! அன்பான இணைய நண்பர்களே இனி என்னையும் பொறுத்துக்கொள்ள வேண்டும். அழித்தல் திருத்தல் இருந்தால் பின்னூட்டமிட்டு திருத்தவும்! (அதற்குள் உரிமை கொண்டாடுகிறானே!)

அகரம், அன்னை, அன்பு - எனக்கு பிடித்த இந்த மூன்று சொல்லை வைத்து ஒரு சிறு பதிவுடன் (அடப்பாவி???) இனிதே துவங்குகின்றேன்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்

அன்னைசொல் நீராக ஊரவர் கொளவை எருவாக
நீளும்இந் நோய் (அன்னை என்ற சொல் திருக்குறளில் ஒரே இடத்தில் மட்டும் தான். அதனால் வேறு வழியில்லாமல் இந்த குறள்)

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்

அகரத்திலே ஆரம்பித்தவிட்ட இப்பதிவில் ஈர்ந்தமிழில் உங்களுக்காக ஊர்ச்சுற்றி எனக்கு ஏற்றக்கருத்தையும் ஐயப்பாட்டையும் ஒப்பித்து ஓதுவேன்! ஒளவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...................!!! (அட நம்ம வடிவேலு கை கொடுத்துட்டார்)
அஃகு இருந்தால் மன்னிக்கவும்

அன்புள்ள விளையாட்டுப்பிள்ளை.