2009-04-01

அயன் - பள பளக்கற - பாடல் வரிகள்

அயன் படத்தில் இருந்து பள பளக்கற பகலா நீ பாடலின் வரிகள் இங்கே...


பள பளக்கற பகலா நீ
பட படக்கற அகலா நீ
அனல் அடிக்கிற துகளா நீ
நகலின் நகலா நீ

மழை அடிக்கிற முகிலா நீ
தினு அடிக்கிற திகிலா நீ
மன மனக்கிற அகிலா நீ
முல்லா மலரா நீ

சூடாக இல்லாவிட்டால்
இரத்தத்தில் வேகம் இல்லை
சேட்டைகள் இல்லாவிட்டால் இனிமை இல்லை
கூட்டைத்தான் தாண்டாவிட்டால்
வண்ணத்துப்பூச்சி இல்லை
வீட்டை நீ தாண்டாவீட்டால்
வானமே இல்லை

வானவில்லை போலே இளைமையடா
தினம் புதுமையடா அதை அனுபவிடா
காலம் காலமாக பெருசங்கடா
ரொம்ப பழசுங்கடா
நீ முன்னே முன்னே வாடா வாடா

பள பளக்கற பகலா நீ...

எட்டி தொடும் வயது இது
ஒரு வெட்டு கத்தி போல் இருக்கும்
அதிசயம் என்ன வென்றால்
அதன் இரு பக்கம் கூர் இருக்கும்
கனவுக்கு செயல் கொடுத்தால்
அந்த சூரியனில் செடி முளைக்கும்
புலன்களை அடக்கி வைத்தால்
தினம் புது புது சுகம் கிடைக்கும்

காலில் குத்தும் ஆணி
உன் ஏணி என்று காமி
பல இன்பம் அள்ளி சேர்த்து
ஒரு மூட்டை கட்டி வா நீ வா நீ

பள பளக்கற பகலா நீ...

இது வரை நெஞ்சில் இருக்கும்
சில துன்பங்களை நாம் மறப்போம்
கடிகாரம் முள் துளைத்து
தொடு வானம் வரை போய் வருவோம்
அடை மழை வாசல் வந்தால்
கையில் குடையின்றி வானலைவோம்
அடையாளம் நாம் துறப்போம்
எல்லா தேசத்திலும் போய் வசிப்போம்

என்ன கொண்டு வந்தோம்
நாம் என்ன கொண்டு போவோம்
அட இந்த நொடி போதும்
வா வேற என்ன வேண்டும் வேண்டும்

பள பளக்கற பகலா நீ...