2008-12-14

மருதமலை மாமணியே முருகய்யா

1972 - அக்டோபர் - 24
தயாரிப்பு: திரு. சாண்டோ M.M.A.சின்னப்பத்தேவரின் தண்டாயுதபாணி பிலிம்ஸ்
படம்: தெய்வம்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
வரிகள்: வியரசர் கண்ணதாசன்
குரல்: மதுரை சோமு


கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?
கொங்குமணி நாட்டினிலே புனித மலை எந்த மலை?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை?
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருத மலை

அ அ அ அ அ அ ஆ
அ அ அ அ அ அ ஆ
அ அ ஆ

மருத மலை
மருத மலை
முருகா

மருதமலை மாமணியே முருகய்யா (2)
தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா

மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா
மருதமலை மாமணியே முருகய்யா

மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம் அய்யா
உனது மனம் பெற மகிழ்ந்திடவே

மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா
மருதமலை மாமணியே முருகய்யா

தைப்பூச நன்னாளில் தேருடன் திருநாளும் பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா
அ.அ..அ..அ..ஆ...
தைப்பூச நன்னாளில் தேருடன் திருநாளும் பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா
அ.அ..அ..அ..ஆ...
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா
மருதமலை மாமணியே முருகய்யா.

கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
அ.அ..அ..அ..ஆ...
ஆ ஆ ஆ
அ அ அ அ அ அ அ அ அ அ அ அ ஆஆ ஆ ஆ
ஆ ஆ ஆ
அ அ அ அ அ அ
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன் (2)
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன்
அ.அ..அ..அ..ஆ...
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன்
அ.அ..அ..அ..ஆ...

மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா
மருதமலை மாமணியே முருகய்யா

சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் - நான் மறவேன்
பக்திக் கடலென பற்றி பெருகிட வருவேன் - நான் வருவேன்
சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் - நான் மறவேன்
பக்திக் கடலென பற்றி பெருகிட வருவேன் - நான் வருவேன்
பரமனின் திருமகனே
அழகிய தமிழ் மகனே
பரமனின் திருமகனே
அழகிய தமிழ் மகனே
காண்பதெல்லாம்.. உனது முகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனது மனம் உருகுது முருகா
காண்பதெல்லாம்.. உனது முகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனது மனம் உருகுது முருகா
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே (2)
பனியது மழையது நதியது கடலது
சகலமும் உனதுரு கருணையில் எழுவது
பனியது மழையது நதியது கடலது
சகலமும் உனதுரு கருணையில் எழுவது
வருவாய்
குகனே
வேலய்யா
அ அ அ அ அ அ ஆ
அ அ அ அ அ அ ஆ
அ அ ஆ

தேவர் வணங்கும் மருதமலை முருகா

மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா
மருதமலை மாமணியே முருகய்யா

==============================================

 இந்தப்பாடலின் பின்னணியில் ஒரு சுவையான நிகழ்ச்சி சொல்லப்படுகிறது. ஒருமுறை 1972ஆம் ஆண்டில் கவியரசு கண்ணதாசனின் மகளின் திருமணத்திற்கு மூன்று நாட்கள் இருக்கும்பொழுது தமக்கு வர வேண்டிய இடத்திலிருந்து பணம் வராமல் போனதினால் கவிஞர் துயருற்றிருந்தாராம். கவிஞரின் இஷ்ட தெய்வம் கண்ணன். அவ்வமயம் தேவரின் ' தெய்வம் ' படத்திற்கு பாடல் எழுதக் கடமையே கண்ணாக கவிஞர் தன் உதவியாளரிடம் இப்பாடலின் வரிகளைச் சொல்லிக்கொண்டிருந்த பொழுது அடுத்த அறையிலிருந்த தேவர் விரைந்து வந்து அந்த வரிகளை மீண்டும் ஒரு முறை திருப்பிச் சொல்லுமாறு கேட்டு அப்பாடல் தமக்கென்றே எழுதப்பட்டதாக எண்ணி மகிழ்ந்து உடனே ஒரு லக்ஷ ரூபாய்கள் கவிஞருக்கு அளித்தது மட்டுமின்றி தமக்குரிய திருமண மண்டபத்தில கவிஞரின் மகளின் திருமணத்தை நடத்தச் செய்தாராம். அந்த ' காலத்தால் செய்த உதவி ' கவியரசிற்கு ' ஞாலத்தில் மாணப் பெரிதாக' க் கண்டதில் வியப்பதற்கேதுமில்லை.

தேவரின் திரைப்பட அரங்கில் கவியரசரும், வித்தகரும் ஒரு நட்போடு கூடிய வாக்கு வாதத்தில் தத்தம் திறமையை நிலை நிறுத்தும் சவாலில் ஈடுபட்டிருந்தபொழுது குன்னக்குடி தம் நண்பரின் திறமைக்குச் சவாலாகக் கடினமான சங்கதிகளுடன் கூடிய விரைவு ஸ்வரங்களை அமைத்து வாசித்த பல்லவி அனுபல்லவி சரணத்திற்கு சற்றும் சளைக்காது சாஹித்யத்தை உடனுக்குடன் எழுதி நண்பர்கள் ஆறத் தழுவிக் கொண்டனராம்.

==============================================